Friday, February 13, 2009

ஈரத்தமிழன் முத்துக்குமாருக்கு வீர வணக்கம்..

நீ
இருண்டு கொண்டிருக்கும்
ஈழத்தமிழர்
வாழ்வு ஒளிபெற
எரிந்து போன
சந்தனக் காடு ..

நாங்கள்
குரல் கொடுத்தோம்..
நீ
உயிர் கொடுத்தாய் ..

எல்லோரும்
உறவுகள் பற்றித்
தெரிந்து கொண்டிருக்க
உனக்குள்
மட்டும் பற்றி
எரிந்து கொண்டிருந்தது
உணர்வுத் தீ !

உன்னைச் சுட்ட
நெருப்பின் வடு
எங்கள் இதயத்தில்...

உன் தியாகம்
எழுச்சி கொண்டு
மலரவேண்டும் தமிழீழம்
நாளைய உதயத்தில்...

No comments:

Post a Comment