Friday, February 13, 2009
நீதியின் மன்றத்தில்....
ஈழத்தீவை
சூழ்ந்திருப்பது
தண்ணீரல்ல ...
கண்ணீர்!!
எம் ரத்த
சொந்தங்களின்
உயிரடங்கும் ஓசை
செவிகளில் இரைச்சலாய் ....
சீதையை மீட்க
யுத்தம் அன்று;
சீதைகளை சிதைக்க
உதவி இன்று;
என்ன தேசம் ?
யார் ராஜ்ஜியம் ?
பிள்ளையைக் கொல்ல
கள்ளிப்பால் கொடுக்கும்
அன்னை...
பிள்ளைகளைக் கொல்ல
ஆயுதம் கொடுக்கும்
அன்னை தேசம் ...
நீதியின் மன்றம்
சொல்லட்டும்
ஒரே தீர்ப்பு...
14.12.2008. அன்று ராணி வார இதழில் வெளிவந்தது ....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment